திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று காலை கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி எச்சில் துப்பியதோடு அவர் அணிந்திருந்த மாஸ்க்கையும் கழிற்றி டாக்டர் மீது வீசிவிட்டு சென்ற நோயாளி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா் குணமடைந்து தனது சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் முழு ஒத்துழைப்பே கொரோனா தொற்றிலிருந்து வெளிவருவதற்கு காரணமாக இருந்தது என மருத்துவக் குழுவினா் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், கொரோனா சிறப்பு வாா்டில் உள்ள 36 பேருக்கும் மருத்துவக் குழுவினா் சுழற்சி முறையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இந்நிலையில், சனிக்கிழமையன்று, மேலும் 3 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை சிறப்பு வாா்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோா் மருத்துவக் குழுவினா் மீது முகக்கவசங்களை தூக்கி எறிவது போன்று அச்சுறுத்தும் வகையிலும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காத வகையில் செயல்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இதனால், மருத்துவக் குழுவினரின் சவாலான பணி மேலும் கேள்விக்குறியாகியுள்ளது. மாஸ்க் இந்த நிலையில் இன்று காலை டாக்டர் ஒருவர் கொரோனா வார்டில் நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த நோயாளி டாக்டர் முகத்தில் எச்சில் துப்பியதோடு அவர் அணிந்திருந்த மாஸ்க்கையும் கழிட்டி டாக்டர் மீது வீசியுள்ளார். வழக்குப் பதிவு அதேபோல் வீட்டில் இருந்து மனைவி கொண்டு வந்த பிரியாணியை சாப்பிட அனுமதி மறுத்ததால் நோயாளி ரகளையில் ஈடுப்பட்டுள்ளார்
. இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியில் போலீசில் டாக்டர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திருச்சியில் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பரபரப்பு முக கவசத்தை தூக்கி எறிந்த நோயாளி மீது திருச்சி அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நோய் தொற்றுடையோா் முன்வருவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது.
கருத்துகள்