வேலையில்லாததால் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சிக்கு நடந்தே வந்த சூளை தொழிலாளர்கள்
திருச்சி: மணப்பாறை அருகே ஒட்டன்சத்திரம் சேர்ந்த ஒரு சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் விசாரணை பின்னர் லாரி மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணப்பாறை அருகே ஒட்டன்சத்திரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு செங்கல் சூளைத் தொழிலுக்கு 6 பேர் சென்றனர். வேலை இல்லாததாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் மீண்டும் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு வருவதற்கு 9 நாட்களாக நடந்தே வந்தனர். யார் இந்த பீலா ராஜேஷ்? குடும்ப பின்னணி என்ன? சீனா முழுவதுமே நாய் இறைச்சிக்கு தடை… இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இரண்டு நாட்களாக பசியில் இருப்பதாக கூறினர். மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு தடை- வைகோ கண்டனம் இதையடுத்து போலீஸார் அனைவருக்கும் உணவு வழங்கி செலவுக்கு கையிலிருந்த பணத்தையும் கொடுத்து அந்த வழியாக வந்த லாரியில் ஏற்றி சொந்த ஊரில் இறக்கிவிட்டுவிட்டு மணப்பாறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு லாரி ஓட்டுநரின் கூறி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்