தமிழகத்தில் இயங்கும் அத்தியாவசிய சேவை முழு விவரம் இதோ..!
கொரோனா தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், உணவகங்கள், மளிகைக் கடைகள் செயல்பட நேர வரம்பு இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தினசரி, வார, மாத வட்டி வசூலை உடனே நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. அதேபோல கிராமங்களில் தினசரி,வார, மாத வட்டி, அசல் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
விற்பனையாளர்கள் காய்கறிகள், பழங்கள் விற்கவிருக்கும் கடைகளை விசாலமான இடங்களில் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், உணவகங்கள், மளிகைக் கடைகள் செயல்பட நேர வரம்பு இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்துவ வசதிக்காக கர்ப்பிணிகள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-வர்த்தகம் பொறுத்தவரையில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய தடை இல்லை எனவும் சமைக்கப்பட்ட உணவுகளை டெலிவரி செய்யும் ஸ்விகி,சொமோட்டோவுக்கான தடை தொடரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.மருத்துவ வசதிக்காக கர்ப்பிணிகள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்த 54 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி படுத்தவேண்டும் என கேட்டுகொடுள்ளனர்.
கருத்துகள்