இலங்கையில் தமிழ் முஸ்லிம் தரப்புகள் கூட்டாக எச்சரிக்கை !
- இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பிரதிபலிப்புக்களை பின்பற்றி தொடர்ந்தும் பெரும்பான்மை வாதத்தினை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருப்பதானது இனங்கள் மேன் மேலும் துருவப்படுத்தப்படும் பேராபத்தையே விளைவிக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அவ்வாறு நாட்டின் சுபீட்சத்தையும், எதிர்காலத்தினையும் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் மனநிலையிலும் அவரது போக்கிலும் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அத்தரப்புக்கள் வலியுறுத்தி கொண்டுள்ளன .
கருத்துகள்